» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 10, மே 2025 12:30:31 PM (IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் 12ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 13ம் தேதி முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்றும் இணையும் பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவை தவிர தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 13ம் தேதியில் தொடங்க உள்ளது.
இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த கா்ற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இதையடுத்து, இன்று முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 13ம் தேதி முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும். இருப்பினும், 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

நீர் மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் கூடாது: போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
சனி 10, மே 2025 11:14:45 AM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண்ணில் இயக்க கோரிக்கை
சனி 10, மே 2025 10:44:08 AM (IST)

அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் : தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி!
சனி 10, மே 2025 10:15:03 AM (IST)

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வாசலுக்கு 2 புதிய சுற்று பஸ்கள் இயக்கம்!
சனி 10, மே 2025 8:40:22 AM (IST)
