» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவட்டார் பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:58:27 AM (IST)

திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் ஊரகப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் எனவும், அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட ஆலம்பாரி மலைவாழ் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. கட்டப்பட்டு வரும் வீட்டின் அடிப்படை வசதிகள், கட்டுமான பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொண்டதோடு, கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெற பயனாளிக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைத்திடுவதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:51:04 AM (IST)

ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நின்று சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:48:08 AM (IST)

திருச்செந்தூர் கோவில் ஆவணி 5-ம் திருவிழா: சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:20:56 AM (IST)

மக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்த மாட்டு வண்டிகள் : விளாத்திகுளம் அருகே பரபரப்பு
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:59:48 PM (IST)

அமைச்சர் துரைமுருகனை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:26:51 PM (IST)

இளைஞர் நீதிக்குழுத்தில் சமூகப்பணி உறுப்பினர் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:19:33 PM (IST)
