» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளைஞர் நீதிக்குழுத்தில் சமூகப்பணி உறுப்பினர் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:19:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் இளைஞர் நீதிக்குழுத்தில் காலியாக உள்ள 2 சமூகப்பணி உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுத்தில் காலியாக உள்ள் 2 சமூகப்பணி உறுப்பினர் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இளைஞர் நீதிக்குழுமத்திற்கு 1 பெண் உட்பட 2 சமூகப்பணி உறுப்பினர் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது மற்றும் இப்பதவி அரசு பணியல்ல.

விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் அல்லது குழந்தை உளவியல் அல்லது மன நலம் மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் பத்திரிகை செய்தி வெளியிடும் நாளில் , விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். 

இதற்கான விண்ணப்படிவத்தை தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையத்தள முகவரியிருந்தும் (http://dsdcpimms.tn.gov.in) மற்றும் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்திலும் (https://thoothukudi.nic.in) விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகுதி வாய்ந்த நபர்கள் சமூகப்பணி உறுப்பினர் பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து 15.09.2025 (திங்கட்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்: 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory