» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அய்யா வைகுண்டரை அவமதித்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு சரத்குமார் கண்டனம்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:44:16 AM (IST)
அய்யா வைகுண்டரை அவமதித்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நடிகர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி, வளர்ச்சி என்று தமிழக அரசு பெருமை பேசும் சூழலில், தமிழ்நாட்டின் முதன்மை அதிகாரிகளையும், அறிவார்ந்த, திறன்வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் TNPSC தேர்வு நடைமுறையில், பல்வேறு குளறுபடிகளால் அதுவும் எளிய மொழிமாற்றம் கூட செய்வதறியாமல் தவறுதலாக கேள்வி உருவாக்கி இருக்கிறார்கள் என்று சொன்னால், TNPSC தேர்வாணையத்தின் தரத்தின் மீது நம்பிக்கையற்ற மனநிலை ஏற்படுகிறது.
தென் மாவட்ட மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அய்யா வைகுண்டர் வழியை பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களின் மனதை இச்செயல் புண்படுத்தியிருக்கிறது. இறைவனை பற்றிய கேள்வியில் ஒரு சரியான விடையும், பல தவறான விடையும் கொடுக்கப்பட்டு இழிவுபடுத்தி உள்ளது மேலும் கண்டனத்திற்குரியது.
தேர்வு தாமதங்கள், முடிவு தாமதங்கள், தேர்வு வினாத்தாள் கசிவு, முறையற்ற தேர்வு நடைமுறைகள் என பல்வேறு குளறுபடிகள் TNPSC - இல் அரங்கேறி வருவது இது முதன்முறை அல்ல, பலமுறை இதுபோன்ற தவறுகள் நேர்ந்திருக்கிறது. உதாரணத்திற்கு முந்தைய குரூப் - 1 தேர்வில் கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 1.அருளப்பன் 2. யோவான் 3. சந்தாசாகிப் 4. சந்நியாசி என பதில் அளித்தும், தேம்பாவணியின் பாட்டுடை தலைவன் யார் என்று கேட்டு அதில் இயேசு, மரியாள், மற்றும் யூதாஸ் பெயர்கள் பதிலுக்கான ஆப்ஷனாக கொடுக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியது.
தொடரும் இந்த TNPSC குளறுபடி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்த்து வைக்க மறுக்கிறது. இந்த அவலங்கள் குறித்த தவறை ஒப்புக்கொண்டு TNPSC மன்னிப்பு கோர வேண்டும் எனவும், இனி இதுபோன்ற குளறுபடி நடைபெறாமல் கூடுதல் கவனத்துடன் செயல்பட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூருக்கு மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அறவாழி நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:36:59 PM (IST)

சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 6:59:32 PM (IST)

செப்.4ம் தேதி தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:48:33 PM (IST)

ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீண்டும் வழக்கில் சேர்ப்பு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:09:45 PM (IST)

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்சார கணக்கெடுப்பு எப்போது?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:43:42 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)
