» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் சூறாவளிக் காற்றுக்கு அரசமரம் சாய்ந்தது: பொதுமக்கள் உயிர் தப்பினர்!
திங்கள் 29, ஜூன் 2026 3:12:41 PM (IST)

தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் இன்று வீசிய சூறாவளிக் காற்று காரணமாகப் பழமைவாய்ந்த அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இச்சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், இன்று வீசிய சூறாவளிக் காற்று காரணமாக தமிழ்ச்சாலையில் உள்ள சத்யா ஏஜென்சிஸ் அருகில் பழமையான அரசமரம் சாய்ந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமான பொலிரோ ஜீப் வாகனத்தின் மீது மரம் விழுந்ததில், அந்த வாகனம் நசுங்கி ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
மரம் விழுந்ததால் அப்பகுதியில் தற்காலிகமாகப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், விழுந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் உதவியுடன் மரத்தை முழுமையாக அகற்றிப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம், ஊழலற்ற நிர்வாகம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் அறிவுறுத்தல்!
திங்கள் 29, ஜூன் 2026 5:06:27 PM (IST)

மின்வாரிய பணியிட நியமனங்களில் குளறுபடி: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
திங்கள் 29, ஜூன் 2026 4:47:49 PM (IST)

நள்ளிரவில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!
திங்கள் 29, ஜூன் 2026 4:26:44 PM (IST)

தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: திமுகவினர் தயாராக இருக்க ஸ்டாலின் அழைப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 12:06:34 PM (IST)

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)

அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி: கரூர் எம்எல்ஏ பதவியை செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!
திங்கள் 29, ஜூன் 2026 11:30:20 AM (IST)


