» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லஞ்சம், ஊழலற்ற நிர்வாகம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் அறிவுறுத்தல்!

திங்கள் 29, ஜூன் 2026 5:06:27 PM (IST)



சென்னையில் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கியது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முக்கிய அதிகாரிகள் மாநாடு இதுவாகும்.

இன்றும் நாளையும் (ஜூன் 29, 30) நடைபெறும் இந்த மாநாடு மொத்தம் மூன்று அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் அமர்வில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட எஸ்பிக்கள் பங்கேற்றுள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்றது முதல் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர்கள் மட்டத்தில் பல்வேறு இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த மாநாட்டில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உத்திகள் மற்றும் தற்போதைய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

மாநாட்டின் இறுதி நாளான நாளை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவுரைகளை வழங்கவுள்ளார். குறிப்பாக, மக்களுக்கு லஞ்சமற்ற, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவது மற்றும் சட்டம் - ஒழுங்கைப் பாரபட்சமின்றிப் பராமரிப்பது குறித்து அதிகாரிகளுக்குப் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory