» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்! – நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!

செவ்வாய் 2, ஜூன் 2026 11:01:57 AM (IST)



இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்ததாக 'ஆக்சியோஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் பேரில் வாஷிங்டனில் வைத்து இஸ்ரேலுக்கும், லெபனான் அரசுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் எட்டப்பட்டது. இருப்பினும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. இதன் காரணமாக, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் திங்கள்கிழமை அதிரடியாக அறிவித்தது.

ஈரானின் இந்த முடிவைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை திங்கள்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இந்த உரையாடலின்போது டிரம்ப் மிகவும் கோபமாகப் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

நெதன்யாகுவிடம் டிரம்ப் பேசுகையில்: "நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் நீங்கள் சிறையில் இருந்திருப்பீர்கள்; நான் தான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது உலக நாடுகள் அனைத்தும் உங்களை வெறுக்கின்றன. உங்களின் இந்தச் செயல்களால் ஒட்டுமொத்த இஸ்ரேலையுமே அனைவரும் வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.

டிரம்ப்பின் எக்ஸ் (X) தளப் பதிவு: இந்தக் காரசாரமான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "அனைத்து விதமான துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படும். இஸ்ரேல் இனி ஹிஸ்புல்லாவைத் தாக்காது; அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நெதன்யாகுவின் விளக்கம்:

அதிபர் டிரம்ப்புடனான தொலைபேசி உரையாடலை உறுதிசெய்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவில்: "இஸ்ரேல் நகரங்கள் மற்றும் மக்கள் மீதான தாக்குதலை ஹிஸ்புல்லா அமைப்பு நிறுத்தத் தவறினால், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் மீண்டும் மிகக் கடுமையாகத் தாக்கும் என்பதை டிரம்ப்பிடம் தெளிவுபடுத்தியுள்ளேன். எங்களின் இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே சமயம், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) திட்டமிட்டபடி தொடர்ந்து செயல்படும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory