» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் லாரி மீது வேன் மோதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் காயம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:00:16 PM (IST)

தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை பழங்காநத்தம் காளியப்ப பிள்ளை நாடார் தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி (52), இவர் தனது குடும்பத்தினர்கள் 17 பேருடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பேரனுக்கு மொட்டை போடுவதற்காக ஒரு வேனில் வந்தனர். வேனை விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த பரமசிவம் மகன் சரவணகுமார் (52) என்பவர் டிரைவராக ஓட்டி வந்தார்.
சுவாமி தரிசனம் செய்த பின்னர் இன்று மதியம் மீண்டும் மதுரைக்கு செல்வதற்காக வேனில் புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் -மதுரை பைபாஸ் ரோடு, ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த 4 குழந்தைகள், 8 பெண்கள், டிரைவர் உட்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
