» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் சாலையை கடக்க உதவி வரும் பெண் காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகின்றவர்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலக எதிரே உள்ள சாலையை கடக்க பெரிதும் சிரமப்பட்டு கடந்து செல்கின்றனர்.
ஆட்சியர் அலுவலக வளாக முகப்பு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண் காவலர்கள் சாலையை கடக்க முடியாமல் இருக்கும் பெரியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் இன்று தனது பென்ஷன் பணத்திற்காக எழுதிக் கொடுக்க வந்த முதியவர் சாலையை கடக்க முடியாமல் திணறி நிற்பதை பார்த்த அப்பகுதியில் பணி புரிந்து கொண்டிருந்த ஊர் காவல் படையை சேர்ந்த பிரேமலதா பெரியவர் சாலையை கடக்க வாகனங்களை நிறுத்தி உதவி செய்தார். ஊர்க்காவல் படையை சேர்ந்த பிரேமலதாவின் செயலை அப்பகுதியில் உள்ளவர்கள் வெகுவாக பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
