» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 4:49:57 PM (IST)
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
அதன்படி, அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் விசாரிப்பார்கள் என்றும் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் லட்சுமி நாராயணன், நிர்மல் குமார், சுவாமிநாதன் ஆகியோரும் மே 28, 29 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சத்திய நாராயணா பிரசாத், செந்தில் குமார் ராமமூர்த்தி, திலகவதி ஆகியோரும் விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பாலாஜி, ஜோதிராமன், சக்திவேல், ராமகிருஷ்ணன், வேல் முருகன், பூர்ணிமா, ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஷமீன் அகமதி, ஆனந்த் வெங்கடேஷ், தண்டபாணி ஆகியோர் விடுமுறைக் கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
