» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் தேவாலயத்திற்குள் நுழைந்து ஊழியருக்கு வெட்டு: வாலிபர் கைது
வியாழன் 1, மே 2025 8:22:26 AM (IST)
தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் நுழைந்து ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில், பணியாளராக வேலை செய்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் அந்தோணிராஜ் (54). இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பைபிள் குறித்து பாடம் கற்றுக்கொடுத்து கொண்டிருந்தாராம்.
அப்போது, ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தடை செய்யப்பட்ட புகையிலையை பயன்படுத்தினாராம். இதை சாமுவேல் அந்தோணிராஜ் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது நண்பர்களுடன் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு, சாமுவேல் அந்தோணி ராஜை தாக்கி, அவரது செல்போனை உடைத்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முகமது மீரான் உசேன் (20) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற இளஞ்சிறார்களைத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
