» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உட்பட 3பேர் கைது
வியாழன் 1, மே 2025 8:32:04 AM (IST)

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மீகா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கயத்தாறு அருகே பணிக்கர்குளத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி மகன் இசக்கிமுத்து (21), திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் நடுத் தெருவை சேர்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22), தூத்துக்குடி மீளவிட்டானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் அவர்களிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
