» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிபிஎஸ்இ நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: அன்பில் மகேஷ்

வெள்ளி 2, மே 2025 11:42:43 AM (IST)

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் தோல்வி (FAIL) என்ற நடைமுறைக்கு எதிராக பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அவர் அளித்த பேட்டியில், "சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. சிபிஎஸ்இ பள்ளிகளில் "நோ ஆல் பாஸ்" தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர்கள் போட மறுத்து கேள்வி எழுப்ப வேண்டும். 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்தால் மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் மன அழுத்தம் உருவாகும். 5ம் வகுப்பு மாணவர்களை பெயில் (FAIL) ஆக்கினால் இடைநிற்றல் அதிகரிக்கும்.

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும். சாக்லேட் சாப்பிடுற வயசு பிள்ளைக்கு எப்படி இதை புரிய வைப்பீங்க?. கடனை வாங்கி சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்?. இதன் காரணமாக தான் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. என்.சி.இ.ஆர்.டி. பாடங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. சிபிஎஸ்இ-யின் இந்த நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தேசிய கல்விக் கொள்ளை உள்ளே நுழைந்தால் மாநில கல்வி அமைப்பே இல்லாமல் போய்விடும் நிலை உருவாகும். தமிழக அரசின் நடவடிக்கையால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். திமுக அரசு அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. மாநில கல்விக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். வரலாற்றில் தேச விரோதிகளை, தியாகிகளாக மாற்றுகிறார்கள். தரமான கல்வி வழங்க புது புது திட்டங்களை உருவாக்கி வருகிறோம். என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

இதுமே 2, 2025 - 07:15:40 PM | Posted IP 104.2*****

நாடக குடும்பங்கள் நீட் பத்தி கவலை இருக்காது

Tamilanமே 2, 2025 - 01:58:32 PM | Posted IP 162.1*****

kalviyil arasiyal seyyatheenga anbil magesh avagale....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory