» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!
செவ்வாய் 17, ஜூன் 2025 4:35:07 PM (IST)
மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகனை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மில்லர் புரத்தை முகவரியாக கொண்டுள்ள நிலையில், மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்த காரணங்களால் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது சென்னையில் குடியிருந்து வருவதோடு முறையாக தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை என்கிற பொதுமக்களின் குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இந்நிலையில் சென்னையில் தான் புதிதாக தொடங்கவுள்ள தொழில் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி தனது சகோதரியான பொன்னரசி என்பவரிடம் ₹17 கோடியை கடனாக பெற்றதாகவும், மேலும் பணம் பெற்று முறையாக பங்குதாரராக சேர்க்காமல் மற்றும் உரிய பணத்தை திரும்ப வழங்காததால் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ₹17 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சரான எஸ்பி சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ் ராஜா மீது வழக்குப் பதிவு செய்ததோடு, வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: ஒட்டன்சத்திரம் அருகே சோகம்!
புதன் 18, ஜூன் 2025 11:07:52 AM (IST)

ஐடி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நடிகர் ஆர்யா விளக்கம்!
புதன் 18, ஜூன் 2025 10:45:35 AM (IST)
