» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!

செவ்வாய் 17, ஜூன் 2025 4:35:07 PM (IST)

மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகனை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சி 59 வார்டு மாமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாநகர அதிமுக தெற்குப் பகுதி செயலாளராகவும் இருந்து வருபவர் எஸ்.பி.எஸ்.ராஜா. அதிமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ஆவார்.

தூத்துக்குடி மில்லர் புரத்தை முகவரியாக கொண்டுள்ள நிலையில், மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்த காரணங்களால் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது சென்னையில் குடியிருந்து வருவதோடு முறையாக தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை என்கிற பொதுமக்களின் குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இந்நிலையில் சென்னையில் தான் புதிதாக தொடங்கவுள்ள தொழில் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி தனது சகோதரியான பொன்னரசி என்பவரிடம் ₹17 கோடியை கடனாக பெற்றதாகவும், மேலும் பணம் பெற்று முறையாக பங்குதாரராக சேர்க்காமல் மற்றும் உரிய பணத்தை திரும்ப வழங்காததால் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ₹17 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சரான எஸ்பி சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ் ராஜா மீது வழக்குப் பதிவு செய்ததோடு, வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற அவரை  சென்னை விமான நிலையத்தில் வைத்து சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory