» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வியாழன் 4, செப்டம்பர் 2025 12:18:59 PM (IST)

திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16327), வரும் 10,12 ஆகிய தேதிகளில் கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கொல்லத்தில் நிறுத்தப்படும்.

மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்(16328), வரும் 11,13 ஆகிய தேதிகளில் குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory