» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூரில் கடல் 80 அடி தூரம் உள்வாங்கியது
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:09:58 AM (IST)
பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் கடல்நீர் 80 அடி தூரம் உள்வாங்கியது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடினர்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அடிக்கடி கடல்நீர் உள்வாங்குவது வழக்கம்.
அதாவது, ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழுவதும் பவுர்ணமி இருக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலையில் திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் நீரானது சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. இது இரவு வரை நீடித்தது.
இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கினாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பாசி படர்ந்த பாறைகள் மீது ஏறி நின்று ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் செப்.10-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 7:30:52 PM (IST)

செங்கோட்டையன் ஆதரவாளர் சத்தியபாமாவின் கட்சிப் பதவியும் பறிப்பு: இபிஎஸ் நடவடிக்கை
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 7:26:21 PM (IST)

அதிமுகவை பலவீனமாக்கி வருகிறது பாஜக : தூத்துக்குடியில் தமிமும் அன்சாரி பேட்டி
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 11:59:24 AM (IST)

பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவி கைது
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:38:19 AM (IST)

செங்கோட்டையனை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
சனி 6, செப்டம்பர் 2025 5:56:51 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பிரேக்கிங் தரிசன முறை: வாபஸ் பெற இந்து முன்னணி வலியுறுத்தல்!
சனி 6, செப்டம்பர் 2025 5:26:52 PM (IST)
