» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செல்போன் பேசியபடி சென்ற வாலிபர் மின்னல் தாக்கி பலி : அம்பை அருகே சோகம்!!
புதன் 29, மார்ச் 2023 11:44:57 AM (IST)
அம்பை அருகே, செல்போன் பேசியபடி சென்ற வாலிபர் இடி-மின்னல் தாக்கியதில் இறந்தார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெயில் வாட்டி எடுக்கிறது. இதேபோல் நேற்று காலையிலும் நெல்லையில் கடும் வெயில் அடித்தது. மதியம் 2 மணியளவில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் நீடித்தது.
இந்தநிலையில் அம்பை பகுதியில் இடி-மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் இறந்தார். அவருடைய பெயர் சின்னராஜா (36). அம்பை சோலைபுரம் அருகில் உள்ள தோணித்துறையைச் சேர்ந்த சீவலமுத்து மகன் ஆவார். விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று மாலையில் வீட்டிலிருந்து அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்க நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனது செல்போனில் அழைப்பு வரவே எடுத்து பேசும்போது, திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். குளிக்க சென்றவர் மின்னல் தாக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த சின்னராஜா உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)
