» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)
கூடங்குளம் கட்டிட ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை-பணம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (30). கட்டிட ஒப்பந்ததாரரான இவரிடம், நக்கனேரியை சேர்ந்த சத்யாதேவி (34) என்பவர் தன்னை உதவிகலெக்டர் என்று கூறியதுடன் வடக்கன்குளத்தை சேர்ந்த சுரேஷ் (37) என்பவரை மண்டல அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். தொடர்ந்து அவர்கள், தன்னிடம் 17 பவுன் நகை, ரூ.8½ லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறி பிரவீன் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் புகார் மனு அளித்தார்.
எஸ்பி உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி சத்யா தேவி மற்றும் 22-ந்தேதி செல்லத்துரை என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி சம்பவத்தின் போது பயன்படுத்திய ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவர் கைது
வியாழன் 8, ஜனவரி 2026 7:59:54 AM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

