» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 6பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்!
திங்கள் 24, நவம்பர் 2025 11:43:16 AM (IST)

தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
தென்காசியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் தென்காசியில் இருந்து கடையநல்லூர் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்தும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பஸ்களும் பலத்த சேதமடைந்தது.
பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளின் 5 பெண்கள் உட்பட 6பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த தென்காசி எஸ் பி அரவிந்த் மற்றும் எலத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் : நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சியர் ஆய்வு
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:43:19 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 12,53,264 வாக்காளர்கள்; 10,635 பேர் நீக்கம்: இறுதி வாக்காளர் பட்டியல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:39:15 PM (IST)

பணகுடி இராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:14:04 PM (IST)

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)


BabuNov 24, 2025 - 05:09:03 PM | Posted IP 172.7*****