» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தோட்டத்தில் கேந்தி பூக்களை டிராக்டர் ஏற்றி அழித்த விவசாயி : விலை வீழ்ச்சியால் விரக்தி
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:29:00 AM (IST)
சங்கரன்கோவில் அருகே விலை வீழ்ச்சியால் கேந்தி பூக்களை தோட்டத்திலேயே விவசாயி டிராக்டர் ஏற்றி அழித்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மல்லிகை, பிச்சி, செவ்வந்தி, சேவல், கேந்தி உள்ளிட்ட பலவகையான பூக்களை சாகுபடி செய்கிறார்கள். கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில் மலர் சந்தையில் கேந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் பலர் பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்றனர்.
இந்த நிலையில் கேந்தி பூக்களை விவசாயி ஒருவர் தனது தோட்டத்திலேயே டிராக்டர் ஏற்றி அழித்து உள்ளார். அதாவது சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கி முத்து. விவசாயியான இவர் தனது ேதாட்டத்தில் கேந்தி பூக்களை சாகுபடி செய்தார். தற்போது, அவற்றை டிராக்டர் மூலம் உழுது அழித்துள்ளார்.
இதுகுறித்து இசக்கிமுத்து கூறியதாவது: சங்கரன்கோவில் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கேந்தி பூ பயிரிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் ஓசூரில் இருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக மலர் சந்தையில் கேந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்து, கடந்த சில நாட்களாக கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
நான் சுமார் 35 சென்ட் தோட்டத்தில் கேந்தி பூக்களை சாகுபடி செய்தேன். ஒரு பூச்செடி ரூ.2-க்கு வாங்கி 65 நாட்கள் பராமரிப்பது போன்றவை மூலம் இதுவரை ரூ.15 ஆயிரம் செலவு செய்துள்ளேன்.
ஆனால் தற்போது கேந்தி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் பூக்களை பராமரிப்பு செய்த செலவுக்கான தொகையும் கிடைக்காமல், பூப்பறித்த செலவுக்கும் கூட விலை போகாத காரணத்தால் கேந்தி பூக்களை டிராக்டர் ஏற்றி அழித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் : சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
சனி 3, ஜனவரி 2026 4:19:36 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு : கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 12:38:11 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித் தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!
சனி 3, ஜனவரி 2026 12:25:43 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 3, ஜனவரி 2026 10:42:24 AM (IST)

அந்தியோதயா ரயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு : பெண் பயணி காயம்!
சனி 3, ஜனவரி 2026 8:22:47 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு
வெள்ளி 2, ஜனவரி 2026 4:36:07 PM (IST)


