» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மதுபோதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்: ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை!
செவ்வாய் 24, மார்ச் 2026 12:48:06 PM (IST)

தூத்துக்குடியில் மதுபோதையில் அஜாக்கிரதையாக லாரி ஓட்டி வந்த ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் ரூ. 10,000 அபராதம் விதித்ததோடு, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் பரிந்துரை செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின்படி, நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு எட்டயபுரம் சாலைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர். லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மதுபோதையில் இருந்தது கருவி மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த லாரியைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் கோவிந்தனுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யப் போக்குவரத்துத் துறைக்குப் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் எனத் தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)

இராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு : அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:14:50 PM (IST)

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)


MullaimathiMar 24, 2026 - 02:09:05 PM | Posted IP 104.2*****