» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)
சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடாமல், சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கூட்டணி கட்சியான அதிமுக கேட்டுக் கொண்டதாலேயே, நெல்லைத் தொகுதிக்குப் பதிலாகச் சாத்தூர் தொகுதியில் போட்டியிடச் சம்மதித்தேன். வேட்பாளர் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்பட்டவுடன் சாத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வேன். எந்தத் தொகுதியில் நின்றாலும் தமிழகம் முழுவதும் எனது மக்கள் பணி தொடரும். நெல்லைக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளை தான்.திமுக அரசுக்கு எதிராக இன்று மாலை 'குற்றப்பத்திரிகை' தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது: திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த முறை 'ஹீரோ'வாக இருந்த திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை 'ஜீரோ'வாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கே திமுக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுக்கும் சூழல் நிலவுகிறது.
மதச்சார்பின்மை என்று பேசும் திமுகதான் மதம் சார்ந்து இயங்குகிறது. முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார், ஆனால் மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வார். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதப் பண்டிகைகளுக்கும் சமமாக வாழ்த்து தெரிவித்து வருகிறது.
பாஜக தொண்டர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றித் தேசத்திற்காகவும், கொள்கைக்காகவும் உழைக்கக்கூடியவர்கள். தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, மக்களின் எண்ணமே முக்கியம். வரும் ஏப்ரல் 4-ம் தேதி பாஜக வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : கள்ளக்காதலனுடன் தாய் கைது!
ஞாயிறு 24, மே 2026 8:46:25 PM (IST)

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 23, மே 2026 8:56:35 AM (IST)

தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம்: கால்நடைகளின் விபரங்களைப் புதுப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 22, மே 2026 5:47:46 PM (IST)

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..? மண்டல மேலாளர் மறுப்பு; 2 பேர் பணிநீக்கம்!
வியாழன் 21, மே 2026 11:20:26 AM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)


