» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கங்கைகொண்டானில் பயோ எனர்ஜி எல்எல்பி நிறுவனம் : முதல்வர் துவக்கி வைத்தார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

கங்கைகொண்டான் தொழிற்சாலை வளாகத்தில் நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி நிறுவனத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.8.2025) தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கி வைத்து திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி. நிறுவனத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கங்கைகொண்டான் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி. நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார்.
2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுடன் நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி நிறுவனமானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் அவர்களால் இன்று காணொலி காட்சி வாயிலாக இந்நிறுவனம் திறந்துவைக்கப்பட்டது. மேலும், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மெசர்ஸ். பிரிட்டானியா இண்டஸ்டிரீஸ் லிமிடெட்., மெசர்ஸ். ஏடிசி டயர்ஸ் பிரைவேட் லிமிடெட்., மெசர்ஸ். நோவா கார்பன் இந்தியா பிரைவேட் லிமிடெட்., ஆகிய நிறுவனங்களின் விரிவாக்க பணியினையும் தொடங்கி வைத்தார்கள்.
மேலும், நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி நிறுவனமானது 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. தென் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காற்றும். இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெற உள்ளனர்.
இந்நிறுவனத்தின் மூலம் பயோஎனர்ஜி மற்றும் தொடர்புடைய தொழில்கள் வளர்ச்சி பெறவும். போக்குவரத்து மற்றும் அதன் சேவைகள் தேவையை அதிகரித்து பிராந்திய அடித்தள வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், தேசிய பயோ எரிபொருள் கொள்கைக்கு துணை நிற்கிறது. இந்த திட்டம் ஆற்றல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வலிமைக்கு ஏற்றதாக செயல்படும்.
இந்நிகழ்ச்சியில், நிறுவன தலைவர் வி.எஸ்.நடராஜன், சுந்தரி நடராஜன், திட்ட ஆலோசகர் மணிவேல், மேலாண்மை இயக்குநர் வசந்தாதேவி, துணை மேலாளர் சங்கரன், கங்கைகொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பிரபாகரன், இளநிலை பொறியாளர் முருகன் உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
K. SermakaniAug 20, 2025 - 07:34:47 PM | Posted IP 172.7*****
இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் தூர்நாற்றதால் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பிற்கு தூயாஉள்ளாகிறார்கள்
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)

K. SermakaniAug 20, 2025 - 08:03:40 PM | Posted IP 104.2*****