» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு - 3பேர் காயம் : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 12:02:48 PM (IST)
களக்காடு அருகே கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு செய்து 3பேரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வலேி மாவட்டம், களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஒரு திருவிழாவின்போது, வெளியூரிலிருந்து வந்த நபர் ஒருவர், கரகாட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து உள்ளூர் நபர்கள் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத 2 பேர் பத்மநேரி கிராமத்திற்கு வந்து, திருவிழா முடிந்து ஓய்வில் இருந்த ஊர் நபர்களை தாக்கியுள்ளனர். இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரகாட்ட நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)

மந்திரமணிAug 8, 2025 - 09:31:29 AM | Posted IP 172.7*****