» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அக்காவுடன் பழகியதால் பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாள் வெட்டு: 5 சிறுவர்கள் கைது!
புதன் 6, ஆகஸ்ட் 2025 11:20:23 AM (IST)
சேரன்மாதேவி அருகே பிளஸ்-2 மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 5 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான். அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவரும் இந்த மாணவனுடன் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
வகுப்பு முடிந்து வீட்டுக்கு சென்றபிறகும் அந்த மாணவர் செல்போனில் மாணவியுடன் மணிக்கணக்கில் பேசுவாராம். இந்த விவகாரம் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் 15 வயதான தம்பிக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது அக்காவுடன் பேசுவதை நிறுத்துமாறு அந்த பிளஸ்-2 மாணவரிடம் அடிக்கடி மிரட்டும் வகையில் கூறியுள்ளார். ஆனால் அந்த பிளஸ்-2 மாணவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பழகி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தம்பி, அக்காவுடன் பழகும் பிளஸ்-2 மாணவரை தாக்குவதற்கு திட்டமிட்டார். இதுகுறித்து தனது வகுப்பில் படிக்கும் நண்பரான 15 வயது சிறுவனிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அதேபகுதியில் வசிக்கும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுவர்கள் 3 பேரிடம் சென்று பேசி திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படையில் நேற்று முன்தினம் இரவில் மாணவியின் தம்பி உள்பட 5 சிறுவர்களும் சேர்ந்து அந்த பிளஸ்-2 மாணவரின் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கு அந்த மாணவரை சந்தித்து, உங்களுடன் பேசவேண்டும், என்னோடு வாருங்கள் என்று கூறினர். இதனை ஏற்று பிளஸ்-2 மாணவரும் 5 சிறுவர்கள் உடன் சென்றுள்ளார். அப்போது தெருவின் ஓரத்தில் ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு பிளஸ்-2 மாணவரை அவர்கள் அழைத்து சென்றனர். பின்னர் சற்றும் தாமதிக்காமல் மாணவியின் தம்பி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிளஸ்-2 மாணவரை வெட்டினான். இதில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதை எதிர்பாராத பிளஸ்-2 மாணவன் படுகாயத்துடன் அலறினான். உடனே 5 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த பிளஸ்-2 மாணவர் மீட்கப்பட்டு சேரன்மாதேவியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிளஸ்-2 மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிளஸ்-2 மாணவனை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மாணவியின் தம்பி உள்பட 5 சிறுவர்களையும் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர்களை சேரன்மாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அக்காவுடன் பழகுவதை கைவிடாததால் பிளஸ்-2 மாணவரை, மாணவியின் தம்பி உள்பட 5 சிறுவர்கள் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)
