» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை: நிலுவைத் தொகை செலுத்த அழைப்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 12:45:43 PM (IST)
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட திட்டப்பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடு தாரர்களுக்கு வட்டித்தள்ளுபடி சலுகையை திருநெல்வேலி வீட்டு வசதி செயற்பொறியாளர் இ.ஜான் ஜோசப் ராஜ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திருநெல்வேலி வீட்டு பிரிவிற்குட்பட்ட திட்டப்பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுக தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழக அரசாணை நிலை) எண்.116, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள்.04.08.2025 வட்டித்தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் ஆணையின்படி மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியினை முழுவதுமாக தள்ளுபடி செய்தும் வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும் மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் வட்டித்தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சலுகை எதிர்வரும் 31.03.2026-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆகவே திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட பாளை பகுதி | முதல் V. குலவணிகர்புரம் TNUDP .கீழநத்தம், நாரணம்மாள்புரம் பகுதி I,II, வி.எம். சத்திரம், வள்ளியூர், சுத்தமல்லி, ஆகிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்களில் 31.03.2015-க்குள் தவணைக்காலம் முடிவுற்றும், இந்நாள்வரை நிலுவைத்தொகை செலுத்த தவறிய ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, 31.03.2026-இதற்குள் நிலுவைத்தொகையை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏற்கனவே முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்களும் திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவினை தொடர்பு கொண்டு உடனடியாக கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் திருநெல்வேலி வீட்டு வசதி செயற்பொறியாளர் இ.ஜான் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)
