» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)
கடையநல்லூர் அருகே கந்துவட்டி கொடுமையால் 100 அடி உயர மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகன் மனைவி லெட்சுமி. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். முருகன் அதே பகுதியைச் சார்ந்த மாரியம்மாள் என்பவரிடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார். தற்போது வட்டியும் அசலும் சேர்த்து 9 லட்சம் ரூபாய் தர வேண்டும் அல்லது வீட்டை எழுதி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மாரியம்மாள் முருகன் லட்சுமி இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த லெட்சுமி சொக்கம்பட்டி பகுதியில் உள்ள மலையில் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)
