» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மத்திய அரசின் பாராட்டுச் சான்று பெற்ற ஊர்காவல் படை பெண் தளபதிக்கு எஸ்பி வாழ்த்து!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 4:25:27 PM (IST)

சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ள தூத்துக்குடி ஊர்க்காவல் படை பெண் படைத்தளபதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.
பொது இயக்குநரகம் - தீயணைப்பு சேவைகள், குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை உள்துறை அமைச்சகம் புதுடெல்லி சார்பாக தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 26 ஊர்க்காவல் படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் படைத் தளபதி உலகம்மாள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மேற்படி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.
மேற்படி உள்துறை அமைச்சகம் புது டெல்லி மூலமாக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற ஊர்க்காவல் படை படைத் தளபதி உலகம்மாள் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (29.04.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் மீரா உடனிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

தூத்துக்குடி மக்கள் சார்பாகமே 3, 2025 - 09:29:11 AM | Posted IP 104.2*****