» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

சீர்காழியில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜாக்கி உலக சாதனை புத்தகத்தின் வருடாந்திர சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா சீர்காழியில் நடைபெற்றது. இதில் உலக சாதனை புரிந்தவர்கள் மற்றும் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சபிதாவுக்கு கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளையும், பல ஆண்டுகளாக திறமையான மாணவர்களை உருவாக்கி வருவதையும் பாராட்டி இந்த ஆண்டின் சிறந்த 100 பெண்மணிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியன் ஐகானிக் பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும் கருத்தாளராகவும் ஆசிரியராகவும் இவரது கற்பித்தல் திறனை பாராட்டி முன்மாதிரி ஆசிரியை என்ற கோல்டு ஸ்டார் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் உலக சாதனை புத்தக நிறுவனர் ஜேக்கப் ஞான செல்வன், சிஇஓ எஸ்தர், பிரசிடெண்ட் பிரியா சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இரட்டை விருது பெற்ற ஆசிரியைக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)
